தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான புதிய பள்ளிக் கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சமாக, நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இனி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என்றும் இனி 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் நடைமுறை நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருகிறது. எனவே, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்பு, மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read More : யூரியா கலந்த தண்ணீர்.. அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் 6 குதிரைகளுக்கு நேர்ந்த சோகம்..
Leave a Reply