சொத்து தகராறில் வீட்டிற்கு வந்த மாமனாரை மருமகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வயது 45. இவர் மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் குமரன் நகரில் கடந்த ஓராண்டாக குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
ராஜாவின் மாமனார் அழகர்சாமி (வயது 55). இவர், தேனி மாவட்டம் கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இவர், ஊரில் உள்ள சொத்துகளில் ராஜாவின் குடும்பத்திற்கு பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு பொழிச்சலூரில் உள்ள மகள் வீட்டிற்கு அழகர்சாமி வந்துள்ளார். அங்கு வந்த அழகர்சாமியிடம், மருமகன் ராஜா தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜா, வீட்டிற்கு வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து மாமனார் என்றும் பாராமல் அழகர்சாமியின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அழகர்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை சிறையில் அடைத்தனர்.
Read More : படுக்கை அறையில் மனைவியுடன் இருந்த கணவன்..!! ஜன்னல் வழியே தெரிந்த உருவம்..!! தருமபுரியில் ஷாக் சம்பவம்