தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்பது தமிழ்நாடு அரசின் ஒரு திட்டமாகும். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே வறுமை ஒழிப்பு மற்றும் சமுதாய அமைப்புகளை உருவாக்குவதே ஆகும். மேலும், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தி, வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இயக்கத்தில் தான் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வேலை வகை : தமிழ்நாடு அரசு
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : திருச்சி
பதவியின் பெயர் : சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer)
கல்வி தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மற்ற தகுதிகள் :
* சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும்.
* பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருக்க வேண்டும்.
* மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிள் ஆவது பங்கேற்றிருக்க வேண்டும்.
* மொபைல் செயலிகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயதாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடவில்லை.
சம்பளம் : தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
விண்ணப்ப கட்டணம் : கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.09.2025
விண்ணப்பிக்கும் முறை : https://tiruchirappalli.nic.in/ என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் 27.09.2025 வரை மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.