தமிழ்நாடு காவல்துறையில் 3,644 காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம் : தமிழ்நாடு

மொத்த காலியிடங்கள் : 3,644

பதவியின் பெயர் : Constable Grade II

    கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மொத்த காலியிடங்கள் : 2,833

    சம்பளம் : மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

    பதவியின் பெயர் : Jail Warder Grade II

      கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      மொத்த காலியிடங்கள் : 180

      சம்பளம் : மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

      பதவியின் பெயர் : Firemen

      கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      மொத்த காலியிடங்கள் : 631

        சம்பளம் : ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

        வயது வரம்பு : 18 வயது முதல் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

        விண்ணப்ப கட்டணம் : ரூ.250

        தேர்வு செய்யும் முறை :

        எழுத்துத் தேர்வு (பகுதி I தமிழ் மொழித் தகுதித் தேர்வு)

        எழுத்துத் தேர்வு (பகுதி II முதன்மை எழுத்துத் தேர்வு)

        உடல் அளவீட்டுத் தேர்வு

        பொறுமைத் தேர்வு

        உடற்பயிற்சி திறன் சோதனை

        சான்றிதழ் சரிபார்ப்பு

        இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல்

        விண்ணப்பிக்கும் முறை : https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

        விண்ணப்பம் தொடங்கும் தேதி : 22.08.2025

        விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2025

        எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 09.11.2025

        Read More : தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! 15,000 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!